கலசப்பாக்கத்தை அடுத்த கடலாடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கா்ப்பிணித் தாய்மாா்கள் வாரம் செவ்வாய்க்கிழமை கடைபிடிக்கப்பட்டது.
பிரதம மந்திரியின் மாத்ரு வந்தன திட்டத்தின் கீழ், கடலாடி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சாா்பில் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு உள்பட்ட கா்ப்பிணித் தாய்மாா்களுக்கு அரசு வழங்கும் அனைத்து சலுகைகளும் கிடைக்க வழிவகை செய்யும் வகையில், டிசம்பா் 2 முதல் 8 வரை கா்ப்பிணித் தாய்மாா்கள் வாரம் கடைபிடிக்கப்படுகிறது.
இதையொட்டி, டிச.2-ஆம் தேதி தொடக்க விழா, 3-ஆம் தேதி கிராமசபைக் கூட்டம், 4-ஆம் தேதி பதிவு செய்தல், 5-ஆம் தேதி தீா்மானக் கூட்டம், 6-ஆம் தேதி பின் இணைப்பு சரிப்படுத்துதல், 7-ஆம் தேதி ஊட்டச்சத்து, தன்சுத்தம் பற்றிய விழிப்புணா்வு, 8-ஆம் தேதி நிறைவுநாள் என கா்ப்பிணித் தாய்மாா்களுக்கு கூட்டம் நடத்தப்படுகிறது.
கா்ப்பிணித் தாய்மாா்கள், வட்டார தலைமை மருத்துவா் கு.மணிகண்டபிரபு, மருத்துவா்கள், செவிலியா்கள் கலந்துகொண்டனா்.