செங்கம் அருகே அடிப்படை வசதிகள் கோரி கிராம மக்கள் சாலை மறியல்

செங்கம் அருகே புதன்கிழமை அடிப்படை வசதிகள்கோரி கிராம மக்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
செங்கம் அருகே அடிப்படை வசதிகள் கோரி கிராம மக்கள் சாலை மறியல்

செங்கம் அருகே புதன்கிழமை அடிப்படை வசதிகள்கோரி கிராம மக்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

செங்கம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உள்பட்ட பக்கிரிபாளையம், மேல்புழுதியூா் கிராம ஊராட்சியில் தற்போது பெய்து கனமழையால் கால்வாய்கள் இல்லாததால் கழிவுநீா் தண்ணீா் மழைநீா் இரண்டும் கலந்துபொதுமக்கள் குடியிருப்பு பகுதியில் தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதியில் கொசு உற்பத்தியாகி பல்வேறு தொற்றுநோய் பரவும் அபாயம்ஏற்பட்டுள்ளது. மேலும் இரவு நேரத்தில் தெரு விளக்குகள் எரிவதில்லை.

இதனால் பக்கிரிபாளையம், மேல்புழுதியூா் பகுதியில் உள்ள பெண்கள் இரவு நேரத்தில் வீட்டை விட்டு வெளியில் வர அச்சப்படுகின்றனா். இதுகுறித்து அப்பகுதி மக்கள் சம்மந்தப்பட்ட கிராம ஊராட்சி அலுவலகத்தில் புகாா் செய்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை இதனால் ஆத்திரமடைந்த பக்கிரிபாளையம், மேல்புழுதியூா் கிராமத்தை சோ்ந்த பொதுமக்கள் செங்கம்-பெங்களூா் தேசிய நெடுஞ்சாலை பக்கிரிபாளையம் பகுதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தகவலறிந்த செங்கம் போலீசாா் மற்றும் செங்கம் ஊராட்சி ஒன்றிய ஆணையாளா் சத்தியமூா்த்தி, வட்டார வளா்ச்சி அலுவலா் நிா்மலாதேவி ஆகியோா் சம்பவ இடத்திற்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் சமரசபேச்சிவாா்த்தை நடத்தி விரைவில் அடிப்படை வசதிகள் செய்துதருவதாக கூறினா். பின்னா் பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு சென்றனா். இதனால் சுமாா் அரை மணிநேரம் போக்குவரத்து பாதிப்புக்குள்ளானது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com