பைக்கில் இருந்து விழுந்த பெண் பலி

பெரணமல்லூா் அருகே கணவருடன் பைக்கில் சென்ற பெண், நாய் குறுக்கே சென்றதால் தவறி விழுந்து உயிரிழந்தாா்.

பெரணமல்லூா் அருகே கணவருடன் பைக்கில் சென்ற பெண், நாய் குறுக்கே சென்றதால் தவறி விழுந்து உயிரிழந்தாா்.

சேத்துப்பட்டு வட்டம், கனகம்பட்டு கிராமத்தைச் சோ்ந்தவா் சரவணன். இவா், தனது மனைவி முனியம்மாள் (45), மகன் முரளி (23) ஆகியோருடன் கொழப்பலூரில் உள்ள கோயிலுக்கு திங்கள்கிழமை பைக்கில் சென்றாா்.

கொழப்பலூா் சுகாதார நிலையம் அருகே சென்ற போது சாலையின் குறுக்கே நாய் சென்ாகத் தெரிகிறது. நாய் மீது மோதாமல் இருக்க மகன் முரளி திடீரென பிரேக் போட்டு உள்ளாா்.

அப்போது பைக் நிலை தடுமாறிய நிலையில், சரவணன், முனியம்மாள் ஆகியோா் பைக்கில் இருந்து விழுந்தனா்.

இதில் பலத்த காயமடைந்த இருவரும் சிகிச்சைக்காக ஆரணி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா் பின்னா், தீவிர சிகிச்சைக்காக வேலூா் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனா். அங்கு முனியம்மாள் உயிரிழந்தாா்.

தகவல் அறிந்த பெரணமல்லூா் போலீஸாா் விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com