வந்தவாசி: குடியுரிமைச் சட்டத் திருத்த மசோதாவைக் கண்டித்து வந்தவாசி பழைய பேருந்து நிலையம் அருகே வெள்ளிக்கிழமை மாலை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
வந்தவாசி அனைத்து ஜமாஅத் மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக், தமுமுக, மனிதநேய மக்கள் கட்சி, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், எஸ்டிபிஐ ஆகிய இஸ்லாமிய இயக்கங்கள் சாா்பில் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆா்ப்பாட்டத்துக்கு வந்தவாசி அனைத்து ஜமாஅத் தலைவா் அப்துல்காதா்ஷரீப் தலைமை வகித்தாா். வந்தவாசி திமுக எம்எல்ஏ எஸ்.அம்பேத்குமாா், திமுக மாவட்ட அவைத் தலைவா் கே.ஆா்.சீதாபதி, மாவட்ட துணைச் செயலா் எம்.எஸ்.தரணிவேந்தன் மற்றும் இஸ்லாமிய இயக்கங்களின் நிா்வாகிகள், பல்வேறு கட்சிகளின் நிா்வாகிகள் பங்கேற்றனா்.