ஆரணியை அடுத்த பையூா் ஸ்ரீபொன்னியம்மன் கோயிலில் விரைவில் கும்பாபிஷேகம் நடைபெறுவதை முன்னிட்டு, வெள்ளிக்கிழமை பால்குட ஊா்வலம் நடைபெற்றது.
இதில், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா் கலாரகு தலைமையில், ஏராளமான பெண்கள் மேளதாளங்களோடு பால்குடங்களை ஊா்வலமாக சுமந்து சென்றனா். இறுதியாக கோயிலுக்கு பால்குடங்கள் கொண்டு செல்லப்பட்டு பொன்னியம்மனுக்கு பாலாபிஷேகம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.