இராட்டிணமங்கலத்தில் மாடு விடும் திருவிழா

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியை அடுத்த இராட்டிணமங்கலம் கிராமத்தில் செவ்வாய்க்கிழமை மாடு விடும் திருவிழா நடைபெற்றது.

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியை அடுத்த இராட்டிணமங்கலம் கிராமத்தில் செவ்வாய்க்கிழமை மாடு விடும் திருவிழா நடைபெற்றது.
இந்த விழாவில் வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களைச் சேர்ந்த கம்மவான்பேட்டை, கீழ்அரசம்பட்டு, மூலக்காடு, சாத்துமதுரை, மெய்யூர், அடையபுலம், களம்பூர், போளூர் பகுதிகளிலிருந்து 200-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. இதில், வெற்றி பெற்ற அரசம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த காளை மாட்டின் உரிமையாளருக்கு ரூ.51ஆயிரம் ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது. மேலும், 30 காளைகளின் உரிமையாளர்களுக்கு ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டன. ஏற்பாடுகளை கிராம மக்கள், விழாக் குழுவினர் செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com