கிரிக்கெட் போட்டியில் வென்றவர்களுக்கு பரிசு

திருவண்ணாமலை மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில் நடத்தப்பட்ட கிரிக்கெட் போட்டியில் வென்றவர்களுக்கான பரிசளிப்பு விழா நடைபெற்றது.

திருவண்ணாமலை மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில் நடத்தப்பட்ட கிரிக்கெட் போட்டியில் வென்றவர்களுக்கான பரிசளிப்பு விழா நடைபெற்றது.
திருவண்ணாமலை மாவட்ட கிரிக்கெட் சங்கம், தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் இணைந்து 2017 - 18ஆம் ஆண்டுக்கான லீக் கிரிக்கெட் போட்டிகளை அண்மையில் நடத்தின. இதில் வெற்றி பெற்ற அணிகளுக்கான பரிசளிப்பு விழா திருவண்ணாமலையில் நடைபெற்றது.
விழாவுக்கு திருவண்ணாமலை மாவட்ட கிரிக்கெட் சங்கத் தலைவர் ஏ.ரகுபதி தலைமை வகித்தார். மாவட்ட கிரிக்கெட் சங்க துணைத் தலைவர் எஸ்.ராஜேந்திரகுமார், இணைச் செயலர் டி.ஸ்ரீஹன்ஸ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் செய்தித் தொடர்பாளரும், திருவள்ளூர் மாவட்ட கிரிக்கெட் சங்கச் செயலருமான ஆர்.என்.பாபா சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு போட்டிகளில் வென்ற அணிகளுக்கு பரிசுகளை வழங்கிப் பாராட்டினார். விழாவில், சங்கச் 
செயலர் எஸ்.சிவக்குமார் மற்றும் சங்க நிர்வாகிகள், விளையாட்டு வீரர்கள் பலர் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com