போளூரில் வெள்ளிக்கிழமை சைக்கிள் மீது பைக் மோதியதில் ஒருவர் உயிரிழந்தார்.
போளூர் தம்புதனுசு தெருவைச் சேர்ந்தவர் பச்சையப்பன் மகன் பிச்சாண்டி (48). இவர், சைக்கிளில் அத்திமூர் கிராமத்துக்கு
செல்வதற்காக போளூர் அரசு மருத்துவமனை அருகே சென்றுகொண்டிருந்தார்.
அப்போது, போளூரை அடுத்த பெலாசூர் கிராமத்தைச் சேர்ந்த ரேணு மகன் பாலாஜி (18) ஓட்டி வந்த பைக், பிச்சாண்டியின் சைக்கிள் மீது மோதியது. இதில், பிச்சாண்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பலத்த காயமடைந்த பாலாஜி, போளூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து போளூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.