பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வுப் பேரணி

ஆரணியை அடுத்த தச்சூரில் அரசு உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் சார்பில், பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வுப் பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ஆரணியை அடுத்த தச்சூரில் அரசு உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் சார்பில், பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வுப் பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
தச்சூரில் உள்ள அனைத்துத் தெருக்களிலும் மாணவர்கள் பேணியாகச் சென்று பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்ப்போம், துணிப் பைகளை உபயோகப்படுத்துவோம் என்பன உள்ளிட்ட முழக்கங்களை எழுப்பி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
பேரணிக்கு பள்ளித் தலைமை ஆசிரியர் ஆர்.கந்தசாமி தலைமை வகித்தார். இதில், பெற்றோர் - ஆசிரியர் கழகத் தலைவர் நிர்மல் குமார், உதவித் தலைமை ஆசிரியர் சுசித்ரா மற்றும்  பள்ளி ஆசிரியர்கள், 6 முதல் 9-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com