போகியின்போது பழைய பொருள்களை எரிப்பதைத் தவிர்க்க வேண்டும்: மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்

திருவண்ணாமலை மாவட்டத்தில் போகிப் பண்டிகையின்போது, பிளாஸ்டிக், செயற்கை இழைகளால் தயாரிக்கப்பட்ட பழைய பொருள்களை எரிப்பதைத் தவிர்க்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார்.


திருவண்ணாமலை மாவட்டத்தில் போகிப் பண்டிகையின்போது, பிளாஸ்டிக், செயற்கை இழைகளால் தயாரிக்கப்பட்ட பழைய பொருள்களை எரிப்பதைத் தவிர்க்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி அறிவுறுத்தினார்.
திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த நம் முன்னோர்கள் பொங்கல் திருநாளுக்கு முந்தைய நாள் வீட்டில் உள்ள இயற்கை சார்ந்த மற்றும் வீட்டுக்குத் தேவையில்லாத பொருள்களை எரித்து பழையன கழிதலும், புதியன புகுதலும்  என்ற அடிப்படையில் போகிப் பண்டிகையைக் கொண்டாடி வந்தனர்.
தற்போது போகிப் பண்டிகையின்போது பழைய பொருள்களான பிளாஸ்டிக், செயற்கை இழைகளால் தயாரிக்கப்பட்ட துணிகள், ரப்பர் பொருள்கள், பழைய டயர், டியூப், காகிதம், ரசாயனம் கலந்த பொருள்களை எரிப்பதால் காற்று மாசு ஏற்படுகிறது.
இதன் மூலம் வெளிப்படும் நச்சு வாயுக்களால் மூச்சுத் திணறல், கண் எரிச்சல் உள்ளிட்ட நோய்களும் ஏற்படுகின்றன. மேலும், வாகன ஓட்டிகளுக்கு மிகுந்த சிரமம் ஏற்படுவதுடன், விபத்துகளும் நிகழ்கின்றன.
எனவே, திருவண்ணாமலை மாவட்டத்தில் போகிப் பண்டிகையின்போது, பழைய பொருள்களை எரிப்பதை தவிர்த்து, காற்றின் தரத்தைப் பாதுகாக்க பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி 
அறிவுறுத்தியுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com