சுகாதார பணியாளர்களுக்கு சீருடை அளிப்பு

வந்தவாசி நகராட்சியில் பணிபுரியும் பொது சுகாதாரப் பணியாளர்களுக்கு இலவச சீருடைகள் உள்ளிட்டவை வழங்கப்பட்டன.

வந்தவாசி நகராட்சியில் பணிபுரியும் பொது சுகாதாரப் பணியாளர்களுக்கு இலவச சீருடைகள் உள்ளிட்டவை வழங்கப்பட்டன.
வந்தவாசி நகராட்சி அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற விழாவில், 30-க்கும் மேற்பட்ட சுகாதாரப் பணியாளர்களுக்கு சீருடைகள், காலணி, தலைக்கவசம், கையுறை, தலைப்பாகை உள்ளிட்ட பொருள்களை நகராட்சி ஆணையர் எஸ்.பார்த்தசாரதி வழங்கினார். நகராட்சி மேலாளர் என்.இராமலிங்கம், சுகாதார ஆய்வாளர் எஸ்.இராமலிங்கம், கணக்கர் ஆ.பிரேமா, இளநிலை உதவியாளர் பெ.சிவக்குமார், சுகாதாரப் பணி மேற்பார்வையாளர்கள் யேசுதாஸ், லோகநாதன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com