மாடுகளுக்கு பூஜை செய்து  வழிபட்ட விவசாயிகள்

மாட்டுப் பொங்கலையொட்டி, போளூரை அடுத்த புலிவானந்தல் கிராமத்தில் புதன்கிழமை மாடுகளுக்கு பூஜை செய்து விவசாயிகள் வழிபட்டனர்.

மாட்டுப் பொங்கலையொட்டி, போளூரை அடுத்த புலிவானந்தல் கிராமத்தில் புதன்கிழமை மாடுகளுக்கு பூஜை செய்து விவசாயிகள் வழிபட்டனர்.
போளூரை அடுத்த புலிவானந்தல், மண்டகொளத்தூர் உள்ளிட்ட கிராமங்களில் பொங்கல் பண்டிகையின் 
3-ஆம் நாளான மாட்டுப் பொங்கலையொட்டி, வீடுகளில் வளர்க்கப்படும் மாடுகளை விவசாயிகள் குளிப்பாட்டி, கொம்பு சீவி, வண்ணம் தீட்டி, மஞ்சள், 
குங்குமம் வைத்தனர். மேலும், மாடுகளுக்கு புதிய கயிறு கட்டி, மாலை அணிவித்து, தீபாராதனை காட்டி வழிபட்டனர். இதையடுத்து, புதுப்பானையில் புத்தரிசி இட்டு, பொங்கல் வைத்து, மாடுகளுக்கு படையலிட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com