அர்ச்சுனன் தபசு மரம் ஏறும் நிகழ்ச்சி

போளூரை அடுத்த இலுப்பகுணம் ஊராட்சியில் அமைந்துள்ள திரெளபதியம்மன் கோயிலில் அர்ச்சுனன் தபசு மரம் ஏறும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

போளூரை அடுத்த இலுப்பகுணம் ஊராட்சியில் அமைந்துள்ள திரெளபதியம்மன் கோயிலில் அர்ச்சுனன் தபசு மரம் ஏறும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இலுப்பகுணம் ஊராட்சியில் பழைமைவாய்ந்த திரெளபதியம்மன் கோயில் அமைந்துள்ளது. 
இந்தக் கோயிலில் கடந்த ஜூன் 27-ஆம் தேதி முதல் மகாபாரதச் சொற்பொழிவு நடைபெற்று வருகிறது.
சொற்பொழிவின் 15-ஆம் நாளான வெள்ளிக்கிழமை அர்ச்சுனன் தபசு மரம் ஏறும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமியை வழிபட்டனர்.  பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com