போளூரை அடுத்த இலுப்பகுணம் ஊராட்சியில் அமைந்துள்ள திரெளபதியம்மன் கோயிலில் அர்ச்சுனன் தபசு மரம் ஏறும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இலுப்பகுணம் ஊராட்சியில் பழைமைவாய்ந்த திரெளபதியம்மன் கோயில் அமைந்துள்ளது.
இந்தக் கோயிலில் கடந்த ஜூன் 27-ஆம் தேதி முதல் மகாபாரதச் சொற்பொழிவு நடைபெற்று வருகிறது.
சொற்பொழிவின் 15-ஆம் நாளான வெள்ளிக்கிழமை அர்ச்சுனன் தபசு மரம் ஏறும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமியை வழிபட்டனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.