உலக மக்கள்தொகை தின விழிப்புணர்வு

திருவண்ணாமலை சண்முகா தொழிற்சாலை கலை, அறிவியல் கல்லூரியில் உலக மக்கள்தொகை தின விழிப்புணர்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

திருவண்ணாமலை சண்முகா தொழிற்சாலை கலை, அறிவியல் கல்லூரியில் உலக மக்கள்தொகை தின விழிப்புணர்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
கல்லூரிப் பொருளாளர் கோ.ராஜேந்திரகுமார் தலைமை வகித்தார். கல்லூரி அறக்கட்டளை உறுப்பினர் எல்.விஜய் ஆனந்த், கல்லூரி துணை முதல்வர் கோ.அண்ணாமலை ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்த் துறைத் தலைவர் இரா.சங்கர் வரவேற்றார். மக்கள்தொகை பெருக்கத்தால் ஏற்படும் விளைவுகள் குறித்து மாணவ, மாணவிகளுக்கு விளக்கப்பட்டது.
தொடர்ந்து, மாணவ, மாணவிகள் உலக மக்கள்தொகை விழிப்புணர்வு உறுதிமொழியை ஏற்றனர். நிகழ்ச்சியில், கல்லூரியின் தமிழ்த் துறைப் பேராசிரியர் திருஞானம், நாட்டு நலப்பணித் திட்ட 
அலுவலர் பன்னீர்செல்வம் உள்படப் பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, கல்லூரி வளாகத்தில் மரக்கன்றுகள் 
நடப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com