இந்தியன் செஞ்சிலுவைச் சங்க வந்தவாசி கிளை சார்பில், உலக புகையிலை ஒழிப்பு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி வந்தவாசி ஸ்ரீகிருஷ்ணா கல்வி மையத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு செஞ்சிலுவைச் சங்க கிளைச் செயலர் பா.சீனிவாசன் தலைமை வகித்தார். ஸ்ரீகிருஷ்ணா கல்வி மைய ஆசிரியர் எ.ராஜா வரவேற்றார். புகையிலையினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து வங்காரம் ஹாசினி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் மு.கேசவன் சிறப்புரை ஆற்றினார். சங்க உறுப்பினர்கள் கு.சதானந்தம், சீ.கேசவராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.