வந்தவாசி பெரிய காலனி பகுதியில் உள்ள ஸ்ரீமகாமாரியம்மன் கோயிலில் கூழ்வார்த்தல் திருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பின்னர், கோயிலிலிருந்து தொடங்கிய அம்மன் வீதியுலா பெரிய காலனி பகுதி, சன்னதி தெரு, தேரடி வழியாகச் சென்றது. இதில் பக்தர்கள் எலுமிச்சை பழம், வேல் ஆகியவற்றை தங்களது உடலில் குத்திக் கொண்டும், அலகு குத்தி உரல் இழுத்தும் உடன் சென்றனர். மேலும், தேரடியில் பக்தர்கள் முதுகில் அலகு குத்திக் கொண்டு கயிற்றில் பறந்தபடி அம்
மனுக்கு மாலை அணிவித்தனர்.