செய்யாறில் உள்ள அரசு கலைக் கல்லூரியில் இளநிலைப் பாடப் பிரிவுகளுக்கான வகுப்புகள் வரும் 17-ஆம் தேதி தொடங்குகின்றன.
செய்யாறு அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் 2019 - 20ஆம் கல்வியாண்டில் பி.ஏ, பி.எஸ்.சி, பி.காம், பி.சி.ஏ போன்ற இளநிலைப் பாடப் பிரிவுகளுக்கான வகுப்புகள் வரும் ஜூன் 17 -ஆம் தேதி தொடங்கப்படுகிறது என கல்லூரி முதல்வரும், வேலூர் மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்குநருமான (கூடுதல் பொறுப்பு) க.எழிலன் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.