மலேரியா விழிப்புணர்வு ஊர்வலம்

கலசப்பாக்கம் அருகேயுள்ள மேல்வில்வராயநல்லூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில், பள்ளி மாணவர்கள்

கலசப்பாக்கம் அருகேயுள்ள மேல்வில்வராயநல்லூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில், பள்ளி மாணவர்கள் பங்கேற்ற மலேரியா குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் வியாழக்கிழமை நடைபெற்றது.
சுகாதார நிலைய ஊழியர்கள், பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்ற இந்த விழிப்புணர்வு ஊர்வலம் நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்றது.
ஊர்வலத்தின்போது, மலேரியா நோயின் தாக்கம், அதை தடுக்கும் வழிமுறைகள் குறித்த துண்டுப் பிரசுரங்களை பொதுமக்களுக்கு விநியோகித்துச் சென்றனர். 
ஊர்வலத்தில் மருத்துவர் பிரதீப், ஆசிரியர்கள், மாணவர்கள், சுகாதாரத் துறையினர் கலந்துகொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com