வேட்டவலம் பகுதியில் 7 நாள்கள் மின் நிறுத்தம்

திருவண்ணாமலை மாவட்டம், வேட்டவலம் துணை மின் நிலையத்தில் திறன் மின்மாற்றி மேம்பாட்டுப் பணி மற்றும்

திருவண்ணாமலை மாவட்டம், வேட்டவலம் துணை மின் நிலையத்தில் திறன் மின்மாற்றி மேம்பாட்டுப் பணி மற்றும் அத்தியாவசிய பராமரிப்புப் பணிகள் வரும் 15-ஆம் தேதி தொடங்கி 21-ஆம் தேதி வரை 7 நாள்கள் நடைபெறவுள்ளதால், அந்த நாள்களில் மின்நிலையத்துக்கு உள்பட்ட பகுதிகளில்  மின் நிறுத்தம் செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மின்வாரிய செயற்பொறியாளர் (கிழக்கு) ராஜசேகரன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
வேட்டவலம் துணை மின்நிலையத்தில் திறன் மின்மாற்றி மேம்பாட்டுப் பணி மற்றும் அத்தியாவசிய பராமரிப்புப் பணிகள் ஜூன் 15-ஆம் தேதி தொடங்கி 21-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளதால் வேட்டவலம் மற்றும் ஆவூர் பிரிவுக்கு உள்பட்ட வைப்பூர், கல்லாயி, சொரத்தூர், வீரபாண்டி ஜமீன், அகரம், நாரையூர், பன்னியூர், வயலூர், நீலந்தாங்கல், வெண்ணியந்தல், ஜமீன்கூடலூர், ஓலைப்பாடி, நெய்வாநத்தம், அணுக்குமலை, பொன்னமேடு, ராஜந்தாங்கல் மற்றும் கோணலூர் பிரிவுக்கு உள்பட்ட பகுதிகளில் மின்நிறுத்தம் செய்யப்படும். 
அதன்படி, கீழ்கரிப்பூர், இசுக்கழிகாட்டேரி, அண்டம்பள்ளம், ஆனானந்தல், மதுராம்பட்டு, நாடழகானந்தல், நா.கெங்கம்பட்டு, செல்லங்குப்பம், காட்டுமலையனூர், பொலக்குணம், கொளத்தூர், சாணிப்பூண்டி, ஏர்பாக்கம், ஆண்டியாபாளையம், பொன்னங்குளம், நெய்குப்பம், வேளானந்தல், செய்யாலேரி, செல்லங்குப்பம், கருங்கல்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் அவ்வப்போது மின்நிறுத்தம் செய்யப்படும். இதற்கு பொதுமக்கள் மற்றும் அனைத்து மின்நுகர்வோர்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com