திருவண்ணாமலை மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர் கூட்டம், வெள்ளிக்கிழமை (ஜூன் 21) நடைபெறுகிறது.
மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெறும் கூட்டத்துக்கு, ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி தலைமை வகிக்கிறார்.
கூட்டத்தில் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள வேளாண்துறை மற்றும் விவசாயம் சார்ந்த துறைகளான தோட்டக்கலைத் துறை, வேளாண் வணிகம், வேளாண் பொறியியல் துறை, கால்நடை பராமரிப்புத் துறை, கூட்டுறவுத் துறை, வருவாய்த் துறை, வங்கியாளர்கள் மற்றும் பிற சார்புத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டு விவசாயிகளின் குறைகள், கோரிக்கைகளுக்குப் பதில் அளிக்கின்றனர்.
எனவே, விவசாயிகள் மற்றும் விவசாய சங்கப் பிரதிநிதிகள் குறைகளை மனுக்களாக அளித்தும் பயன் பெறலாம் என்று மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி தெரிவித்தார்.