செய்யாறு அரசு கலைக் கல்லூரியில் எம்.ஏ., எம்.எஸ்.சி., எம்.காம். போன்ற முதுநிலை பாடப் பிரிவுகளுக்கான விண்ணப்பங்கள் திங்கள்கிழமை முதல் விநியோகிக்கப்பட்டு வருகின்றன.
இதுகுறித்து கல்லூரி முதல்வர் க.எழிலன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: செய்யாறு அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் எம்.ஏ., எம்.எஸ்.சி., எம்.காம். போன்ற முதுநிலை பாடப் பிரிவுகளுக்கான விண்ணப்பங்கள் திங்கள்கிழமை முதல் வழங்கப்பட்டு
வருகிறது.
வரும் 28 -ஆம் தேதி வரை கல்லூரி அலுவலகத்தில் காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை வழங்கப்படும் விண்ணப்பத்தின் விலை ரூ.60 ஆகும். எஸ்.சி., எஸ்.டி பிரிவினருக்கு ரூ.2 மட்டும் பதிவுக் கட்டணமாக செலுத்தி சான்றொப்பமிட்ட சாதிச் சான்றிதழ் கொடுத்து விண்ணப்பத்தை பெற்றுக் கொள்ளலாம்.
நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பங்கள் கல்லூரி அலுவலகத்தில் ஜூன் 28-ஆம் தேதி சேர்க்கப்பட வேண்டும். மேற்கண்ட முதுநிலை பாடங்களுக்கான மாணவர்கள் கலந்தாய்வு ஜூலை 10-ஆம் தேதி கல்லூரியில் நடைபெறும் என அதில் தெரிவித்துள்ளார்.