போளூர், ஜவ்வாது மலை ஒன்றியத்தில் உள்ள சுகாதார ஊக்குநர்களுக்கு வட்டார அளவிலான ஒருநாள் பயிற்சி முகாம் அண்மையில் நடைபெற்றது.
தூய்மை பாரத இயக்கம் சார்பில், போளூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடைபெற்ற இந்த பயிற்சி முகாமில் மாநில பயிற்றுநர் காந்திமதி பங்கேற்று, சுகாதார ஊக்குநர்களுக்கு திட்டமிடுதல், செயல்படுத்துதல், ஊக்கத்தொகை அளித்தல், தொடர் பயன்பாட்டில் உள்ளதா என கண்காணித்தல் குறித்து பயிற்சி அளித்தார். பயிற்சி முகாமுக்கு தலைமை வகித்த வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ.) ப.பரணிதரன், சுகாதார ஊக்குநர்களுக்கு சுகாதாரம் குறித்த கையேடுகளை வழங்கினார்.
வட்டார வளர்ச்சி அலுவலர் டி.கே.லட்சுமிநரசிம்மன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் தாட்சாயிணி மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.