செங்கம் தளவாநாய்க்கன்பேட்டை பகுதியில் குடிநீரில் கழிவுநீர் கலந்து வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
செங்கம் பேரூராட்சிக்கு உள்பட்ட 18-வது வார்டு தளவாநாய்க்கன்பேட்டை பகுதிக்கு குடிநீர் வரும் குழாயின் ஒரு பகுதியில் பழுது ஏற்பட்டுள்ளது. இதனால் அந்தப் பகுதிக்கு வரும் குடிநீரில் கழிவுநீர் கலந்து வருகிறது. மேலும், வரும் நீரில் துர்நாற்றம் வீசுகிறது. இதைப் பயன்படுத்தும் பொதுமக்களுக்கு பல்வேறு நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து, உடைந்த குடிநீர்க் குழாயை சரிசெய்ய வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.