கீழ்பென்னாத்தூர் ஊராட்சி ஒன்றிய ஆணையராக டி.கே.லட்சுமி நரசிம்மன் செவ்வாய்க்கிழமை பொறுப்பேற்றார். போளூர் ஊராட்சி ஒன்றிய ஆணையராக இருந்த இவர், பணிமாறுதல் பெற்று கீழ்பென்னாத்தூர் வந்துள்ளார். இவரிடம் வட்டார வளர்ச்சி அலுவலர் கே.வி.மகாதேவன் பொறுப்புகளை ஒப்படைத்தார். புதிய ஆணையரை அலுவலர்கள் ஊழியர்கள் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.