மழை வளம் பெற மாணவர்களுக்கு மழை வாழ்த்துப் பயிற்சி

செங்கம் அருகே அரசுப் பள்ளியில் மழை வளம் பெற மாணவர்களுக்கு செவ்வாய்க்கிழமை மழை வாழ்த்துப் பயிற்சி அளிக்கப்பட்டது.

செங்கம் அருகே அரசுப் பள்ளியில் மழை வளம் பெற மாணவர்களுக்கு செவ்வாய்க்கிழமை மழை வாழ்த்துப் பயிற்சி அளிக்கப்பட்டது.
 செங்கத்தை அடுத்த குருமப்பட்டி அரசு தொடக்கப் பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு நடைபெற்ற இந்த பயிற்சி முகாமில், மழைநீர் சேகரிப்பு முறைகள், அதன் பயன்கள், மற்றும் மழை நீரின் முக்கியத்துவம் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு பயிற்சி அளிக்கப்பட்டது.
 மாணவர்கள் வான் சிறப்பு அதிகாரத்தில் உள்ள திருக்குறள் பாடல்களை பாடினர், வீடுதோறும் மழைநீர் சேகரிப்பு தொட்டி அமைத்தல் குறித்து உறுமொழி ஏற்றனர். தலைமை ஆசிரியர் சிவராமன், ஆசிரியர் பயிற்றுநர் செல்வகுமாரி, ஆசிரியர் சுடலைப்பாண்டி ஆகியோர் பயிற்சியில் உடனிருந்தனர்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com