திருவண்ணாமலை மாவட்டத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர்களாக பணிபுரியும் 3 பேரை பதவியிறக்கம் செய்தும், 17 துணை வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு பதவி உயர்வு அளித்தும், 15 பேரை இடமாறுதல் செய்தும் மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி உத்தரவிட்டார்.
திருவண்ணாமலை மாவட்ட ஊரக வளர்ச்சித் துறையில் நிர்வாக நலன் கருதி 15 வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இடமாறுதல் செய்யப்பட்டுள்ளனர். இதேபோல, நீதிமன்ற உத்தரவின் பேரில் 17 துணை வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு வட்டார வளர்ச்சி அலுவலர்களாக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.
கடந்த இரண்டரை ஆண்டுகளாக வட்டார வளர்ச்சி அலுவலர்களாகப் பணிபுரிந்து வந்த 3 பேருக்கு வழங்கப்பட்ட பதவி உயர்வை ரத்து செய்து, துணை வட்டார வளர்ச்சி அலுவலர்களாக பதவியிறக்கம் செய்து மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி உத்தரவிட்டார்.
நீதிமன்ற உத்தரவின் பேரில் 3 பேர் பதவியிறக்கம் செய்யப்பட்டுள்ளது ஊரக வளர்ச்சித் துறையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.