சாலையோரம் தூங்கியவர் வாகனம் ஏறியதில் சாவு

வந்தவாசி அருகே அடையாளம் தெரியாத வாகனம் ஏறியதில் சாலையோரம் தூங்கியவர் உயிரிழந்தார்.

வந்தவாசி அருகே அடையாளம் தெரியாத வாகனம் ஏறியதில் சாலையோரம் தூங்கியவர் உயிரிழந்தார்.
 வந்தவாசியை அடுத்த அமுடூர் கிராமத்தைச் சேர்ந்த பெயிண்டர் கோவிந்தராஜ் (60). இவர், வெள்ளிக்கிழமை இரவு மது அருந்திவிட்டு படூர் கூட்டுச்சாலை அருகே சாலையோரம் மதுபோதையில் படுத்து கிடந்தாராம். அப்போது, அந்த வழியாகச் சென்ற அடையாளம் தெரியாத வாகனம் இவர் மீது ஏறிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இதில் கோவிந்தராஜ் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து அவரது மனைவி விஜயா அளித்த புகாரின்பேரில், தெள்ளாறு போலீஸார் சனிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com