மனுநீதி நாள் முகாமில் 74 பேருக்கு நலத் திட்ட உதவிகள்

கீழ்பென்னாத்தூரை அடுத்த கனபாபுரம் கிராமத்தில் சனிக்கிழமை நடைபெற்ற சிறப்பு மனுநீதி நாள் முகாமில், 74 பேருக்கு பல்வேறு நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

கீழ்பென்னாத்தூரை அடுத்த கனபாபுரம் கிராமத்தில் சனிக்கிழமை நடைபெற்ற சிறப்பு மனுநீதி நாள் முகாமில், 74 பேருக்கு பல்வேறு நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
 முகாமுக்கு திருவண்ணாமலை மாவட்ட வழங்கல் அலுவலர் ஹரிதாஸ் தலைமை வகித்தார். கீழ்பென்னாத்தூர் சமூக பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியர் ராம்பிரபு, தலைமையிட துணை வட்டாட்சியர் சாந்தி, வட்ட சார் துணை ஆய்வாளர் சந்தோஷ், வருவாய் ஆய்வாளர் லட்சுமண பெருமாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
 முகாமில், பொதுமக்களிடம் இருந்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 103 மனுக்கள் பெறப்பட்டன.
 இவற்றில், 74 மனுக்கள் ஏற்கப்பட்டு பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகளை திருவண்ணாமலை மாவட்ட வழங்கல் அலுவலர் ஹரிதாஸ் வழங்கினார். இதில், வழுதலங்குணம் கிராம நிர்வாக அலுவலர்கள் பிரவீண்குமார், சுதாகரன், கார்த்திகேயன், நாராயணமூர்த்தி உள்பட கிராம நிர்வாக அலுவலர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com