சேத்துப்பட்டு திவ்யா கல்வியியல் கல்லூரியில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கல்லூரித் தாளாளர் பா.செல்வராசன் தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் ரமேஷ் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக திருவண்ணாமலை மண்டல தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் பாதுகாப்பு, பயிற்சி பிரிவில் பணியாற்றும் உதவிப் பொறியாளர் ஜீவானந்தம் கலந்துகொண்டு பேசியதாவது: நேர மேலாண்மை, சாலை விதிகளை கடைப்பிடிக்காததால் அதிகளவில் வாகன விபத்துகள் நிகழ்கின்றன. எனவே, பொதுமக்களும், மாணவ, மாணவிகளும் சாலை விதிகளையும், குறியீடுகளையும் பின்பற்றி வாகனங்களை இயக்க வேண்டும் என்றார். மேலும், சாலை விதிகள் குறித்த விழிப்புணர்வு விடியோக்களும் திரையிடப்பட்டன. இதில், கல்லூரிப் பேராசிரியர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் பலர் கலந்துகொண்டனர்.