பொள்ளாச்சி சம்பவம்: அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

பொள்ளாச்சி சம்பவத்தைக் கண்டித்தும், பெண்கள் மீதான வன்முறைகள், வன்கொடுமைகளுக்கு

பொள்ளாச்சி சம்பவத்தைக் கண்டித்தும், பெண்கள் மீதான வன்முறைகள், வன்கொடுமைகளுக்கு காரணமானவர்களைக் கைது செய்ய வலியுறுத்தியும் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
செய்யாறு வட்டாட்சியர் அலுவலகம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, அரசு ஊழியர் சங்க வட்டத் தலைவர் எஸ்.குப்புசாமி தலைமை வகித்தார். வருவாய்த் துறை அலுவலர்கள் சங்க மாவட்ட துணைத் தலைவர் பாஸ்கர், ஆரம்பப் பள்ளி ஆசிரியர்கள் கூட்டணி மாவட்டப் பொருளாளர் ஜி.வெங்கடபதி, பட்டதாரி ஆசிரியர்கள் கழகம் ஏழுமலை, அரசு ஊழியர்கள் சங்க மாவட்ட துணைத் தலைவர் கோ.ஸ்ரீதரன், ஊரக வளர்ச்சித் துறை மாநிலச் செயலர் ச.பாரி ஆகியோர் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினர்.
இதில், ஆண்கள், பெண்கள் என சுமார் 100 -க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com