போளூரை அடுத்த செம்மியமங்கலம் ஊராட்சிப் பகுதியில் 5 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக ஒருவரை போக்சோ சட்டத்தின் கீழ் போளூர் மகளிர் போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.
போளூரை அடுத்த செம்மியமங்கலம் கிராமப் பகுதியைச் சேர்ந்த தொழிலாளி சென்னையில் வேலை செய்து வருகிறார். இவரது 5 வயது மகள் பாட்டியின் பராமரிப்பில் இருந்து வந்தார். அந்தப் பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வரும் சிறுமி, சனிக்கிழமை விடுமுறை என்பதால், தெருவில் விளையாடிக்கொண்டிருந்தார்.
அப்போது, அங்கு வந்த அதே கிராமப் பகுதியைச் சேர்ந்த குப்பன் மகன் ஏழுமலை (40), சிறுமிக்கு மிட்டாய் வாங்கித் தருவதாக அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்தாராம்.
இதனையறிந்த சிறுமியின் பாட்டி, இதுகுறித்து போளூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், போளூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்து ஏழுமலையை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.