பெண் மாயம்

செய்யாறில் வங்கிக்கு செல்வதாக கூறிச் சென்ற இளம் பெண் மாயமானார்.


செய்யாறில் வங்கிக்கு செல்வதாக கூறிச் சென்ற இளம் பெண் மாயமானார்.
செய்யாறு சந்தை காமராஜர் பகுதியைச் சேர்ந்தவர் ஜஹாங்கீர் (25). இவர், சிக்கன் பக்கோடா கடை வைத்துள்ளார். இவரது மனைவி ஆபிதா (22). இவர்களுக்கு ஓராண்டுக்கு முன் திருமணம் நடைபெற்றது. 
தம்பதிக்கு இடையே குடும்பத் தகராறு இருந்து வந்ததாம்.
இந்த நிலையில், கடந்த 13-ஆம் தேதி வங்கிக்கு செல்வதாக கூறிச் சென்ற ஆபிதா, மீண்டும் வீடு திரும்பவில்லை. உறவினர்கள் வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லை.
இதுகுறித்து ஜஹாங்கீர் அளித்த புகாரின்பேரில், செய்யாறு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com