வாக்காளர் விழிப்புணர்வு ஊர்வலம்

கீழ்பென்னாத்தூர் பேரூராட்சி நிர்வாகம் சார்பில், மக்களவைத் தேர்தலில் 100 சதவீதம் வாக்களிப்பது குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் சனிக்கிழமை நடைபெற்றது.


கீழ்பென்னாத்தூர் பேரூராட்சி நிர்வாகம் சார்பில், மக்களவைத் தேர்தலில் 100 சதவீதம் வாக்களிப்பது குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் சனிக்கிழமை நடைபெற்றது.
ஊர்வலத்துக்கு பேரூராட்சி செயல் அலுவலர் எஸ்.கணேசன் தலைமை வகித்தார். பேரூராட்சி அலுவலகம் எதிரில் இருந்து புறப்பட்ட ஊர்வலம் திருவண்ணாமலை சாலை, திண்டிவனம் சாலை, அவலூர்பேட்டை சாலை, காந்தி தெரு வழியாகச் சென்று மீண்டும் பேரூராட்சி அலுவலகம் வந்தடைந்தது.
ஊர்வலத்தில், மகளிர் சுயஉதவிக் குழுவினர் பலர் கலந்து கொண்டு பொதுமக்களிடையே மக்களவைத் தேர்தலில் 100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இதைத் தொடர்ந்து, 100 சதவீதம் வாக்களிப்பது குறித்த உறுதிமொழியேற்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில், சுகாதார மேற்பார்வையாளர் செல்வன் மற்றும் அலுவலக ஊழியர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com