விவசாயி தற்கொலை

செய்யாறு அருகே யானைக்கால் நோயால் அவதிப்பட்டு வந்த விவசாயி விஷ மருந்தைக் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.


செய்யாறு அருகே யானைக்கால் நோயால் அவதிப்பட்டு வந்த விவசாயி விஷ மருந்தைக் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.
பெரணமல்லூரை அடுத்த நமத்தோடு கிராமத்தைச் சேர்ந்த விவசாயி பழனி (45). இவர், யானைக்கால் நோயால் பல ஆண்டுகளாக அவதிப்பட்டு வந்தார். 
நோயின் காரணமாக பழனிக்கு அடிக்கடி காய்ச்சல் ஏற்பட்டு வந்ததாம்.
இதனால் மனமுடைந்த பழனி, வெள்ளிக்கிழமை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷ மருந்தைக் குடித்து மயங்கிக் கிடந்தாராம். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை உறவினர்கள் மீட்டு, சிகிச்சைக்காக சேத்துப்பட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.
எனினும், அங்கு அவர் உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின்பேரில் பெரணமல்லூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com