வந்தவாசியில் ஆட்டோ ஓட்டுநர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
வந்தவாசி பஜனை கோயில் தெருவைச் சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுநர் கோபி (36). இவரது மனைவி பானுமதி. இந்த நிலையில், கோபி குடும்பச் செலவுக்கு பணம் தராமல் தினமும் மது அருத்திவிட்டு வீட்டுக்கு வருவாராம். இதனால் கணவன்- மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்படுமாம். கடந்த புதன்கிழமை மது போதையில் வீட்டுக்கு வந்த கோபியிடம், பானுமதி இதுகுறித்து கேட்டு, தகராறு செய்தாராம். இதனால் மனமுடைந்த கோபி, இரவு வீட்டின் பின்புறம் உள்ள மரத்தில் புடவையால் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து பானுமதி அளித்த புகாரின் பேரில், வந்தவாசி தெற்கு போலீஸார் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனர்.