சேத்துப்பட்டு அருகேயுள்ள தேவிகாபுரம் அரசு மகளிர் உயர்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவிகளுக்கு மதிப்பெண் மற்றும் மாற்றுச் சான்றிதழ் வியாழக்கிழமை வழங்கப்பட்டது.
இந்தப் பள்ளியில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதியவர்களில் 123 மாணவிகள் தேர்ச்சி பெற்றனர். இவர்களுக்கு பள்ளித் தலைமை ஆசிரியர் சரவணன் மதிப்பெண் மற்றும் மாற்றுச் சான்றிதழை வழங்கினார். உதவி ஆசிரியர் சடகோபன் உள்ளிட்ட ஆசிரியர்கள் உடனிருந்தனர்.