கல்லூரி தின விழா

வந்தவாசி ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி கல்வியியல் கல்லூரியில் கல்லூரி தின விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

வந்தவாசி ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி கல்வியியல் கல்லூரியில் கல்லூரி தின விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
 கல்லூரி நிறுவனர் பி.முனிரத்தினம் தலைமை வகித்தார். கல்லூரிச் செயலர் எம்.ரமணன் முன்னிலை வகித்தார். கல்லூரி துணை முதல்வர் சி.சண்முகம் வரவேற்றார். கல்லூரி முதல்வர் வி.நிமாதேவி ஆண்டறிக்கை வாசித்தார்.
 செஞ்சி அருகேயுள்ள சத்தியமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளி ஆங்கில பட்டதாரி ஆசிரியர் எஸ்.திலீப் சிறப்புரை ஆற்றினார். மேலும், பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு அவர் பரிசுகளை வழங்கினார்.
 விழாவில் அரிமா சங்க மாவட்ட தலைவர் ஆர்.சரவணன், கல்லூரி ஆசிரியர்கள் எஸ்.சங்கரநாராயணன், டி.லட்சுமிகாந்தன், டி.புவனேஸ்வரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com