தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் 48 பவுன் நகைகள், ரூ,80 ஆயிரம் திருட்டு

செய்யாறு அருகே தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் 48 பவுன் தங்க நகைகள், ரூ.80 ஆயிரம் ரொக்கத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.

செய்யாறு அருகே தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் 48 பவுன் தங்க நகைகள், ரூ.80 ஆயிரம் ரொக்கத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.
 திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் வட்டம், அப்துல்லாபுரம் கிராமம் விநாயகா நகர் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக் ( 38). இவர், சென்னை அருகே இருங்காட்டுக்கோட்டையில் உள்ள கார் உதிரிப்பாகங்கள் தொழில்சாலையில் பணியாற்றி வருகிறார். இவர் தனது குடும்பத்தினருடன் கடந்த 10 -ஆம் தேதி இரவு கொடைக்கானலுக்கு சுற்றுலா சென்றிருந்தார். சுற்றுலா சென்றபோது மாமனார் பிரகாசம் பாதுகாப்பில் வீட்டை விட்டுச் சென்றதாகத் தெரிகிறது. பிரகாசத்தின் மனைவிக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால், கார்த்திக் வீட்டுக்கு புதன்கிழமை (மே15) வரவில்லை எனத் தெரிகிறது.
 இந்த நிலையில், வியாழக்கிழமை அதிகாலை கார்த்திக் தனது மாமனார் பிரகாசத்தை தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஊருக்கு வந்து கொண்டிருக்கிறேன். வீட்டைத் திறந்து வைக்குமாறு தகவல் தெரிவித்தார்.
 இதையடுத்து, கார்த்திக் வீட்டுக்கு பிரகாசம் சென்றார். அப்போது வீட்டின் முன் கதவு பூட்டு உடைக்கப்பட்டிருந்ததைக் கண்டார். உடனே கார்த்திக்குக்கு தகவல் தெரிவித்தார்.
 அவர் விரைந்து வந்து பார்த்த போது படுக்கை அறை உள்ளிட்ட பகுதிகளில் இருந்த இரண்டு பீரோக்கள் உடைக்கப்பட்ட நிலையில் இருந்தன. மேலும், அதில் வைத்திருந்த 48 பவுன் தங்க நகைகள், ரூ.80 ஆயிரத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரிய வந்தது.
 இதுகுறித்து கார்த்திக் தூசி காவல் நிலையத்தில் புகார் செய்தார். காவல் ஆய்வாளர் ரேகாமதி, உதவி ஆய்வாளர் பிரபு ஆகியோர் வழக்குப் பதிவு செய்தனர்.
 மேலும், தடய அறிவியல் பிரிவு டி.எஸ்.பி. சுந்தரராஜன் தலைமையிலான குழுவினர் விரைந்து வந்து தடயங்களைப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com