முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை திருவண்ணாமலை
செஞ்சிலுவைச் சங்கம் சார்பில் பானி புயல் நிவாரண நிதி
By DIN | Published On : 18th May 2019 08:09 AM | Last Updated : 18th May 2019 08:09 AM | அ+அ அ- |

திருவண்ணாமலை மாவட்ட செஞ்சிலுவைச் சங்கம் சார்பில், பானி புயல் நிவாரண நிதி வழங்கும் நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமியிடம் ரூ.25 ஆயிரத்துக்கான காசோலையை மாவட்ட செஞ்சிலுவைச் சங்கத் தலைவர் பா.இந்திரராஜன் வழங்கினார்.
நிகழ்ச்சியில், மாவட்ட செஞ்சிலுவைச் சங்கச் செயலர் வீ.மதியழகன், மாவட்டப் பொருளாளர் பாபு கு.ராதாகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.