முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை திருவண்ணாமலை
வாக்கு எண்ணும் அலுவலர்களுக்குப் பயிற்சி
By DIN | Published On : 18th May 2019 08:08 AM | Last Updated : 18th May 2019 08:08 AM | அ+அ அ- |

வந்தவாசி சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட வாக்கு எண்ணும் அலுவலர்களுக்கான பயிற்சி முகாம் வந்தவாசி வட்டாட்சியர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
ஆரணி மக்களவைத் தொகுதிக்கான தேர்தல் வாக்கு எண்ணிக்கை திருவண்ணாமலை சண்முகா தொழிற்சாலை அரசு மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்தில் வரும் 23-ஆம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி, வந்தவாசி சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட வாக்கு எண்ணும் அலுவலர்களுக்கு இந்தப் பயிற்சி அளிக்கப்பட்டது.
உதவித் தேர்தல் அலுவலர் அ.ந.லாவண்யா தலைமை வகித்து, வாக்கு எண்ணும் அலுவலர்களுக்கு பயிற்சி அளித்தார். வந்தவாசி வட்டாட்சியர் அரிக்குமார், துணை வட்டாட்சியர்கள் சுமதி, குமரவேல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.