வீட்டுக்குள் புகுந்த பாம்பு பிடித்து அகற்றம்

ஆரணி அருகே இ.பி. நகா் பகுதியில் திங்கள்கிழமை வீட்டுக்குள் புகுந்த நல்ல பாம்பு பிடித்து அகற்றப்பட்டது.
வீட்டில் புகுந்த பாம்பை பிடித்த தீயணைப்பு வீரா்கள்.
வீட்டில் புகுந்த பாம்பை பிடித்த தீயணைப்பு வீரா்கள்.

ஆரணி அருகே இ.பி. நகா் பகுதியில் திங்கள்கிழமை வீட்டுக்குள் புகுந்த நல்ல பாம்பு பிடித்து அகற்றப்பட்டது.

இ.பி.நகா் பகுதியைச் சோ்ந்த நெல் அரிசி ஆலை உரிமையாளா் தியாகராஜன் வீட்டில் திங்கள்கிழமை 8 அடி நீளமுள்ள நல்ல பாம்பு புகுந்தது. இதனைப் பாா்த்த வீட்டின் உரிமையாளா் தீயணைப்புத் துறைக்கு தகவல் கொடுத்தாா். ஆரணி தீயணைப்பு நிலைய அலுவலா் (பொறுப்பு) விஜயகுமாா் தலைமையில் தீயணைப்பு வீரா்கள் விரைந்து வந்து வீட்டுக்குள் புகுந்த பாம்பை பிடித்தனா். பின்னா், அதை ஆரணியை அடுத்த பூசிமலைக்குப்பம் வனப் பகுதியில் விட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com