முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை திருவண்ணாமலை
டென்னிஸ் போட்டி: முருகையன் பள்ளி சிறப்பிடம்
By DIN | Published On : 07th November 2019 08:05 AM | Last Updated : 07th November 2019 08:05 AM | அ+அ அ- |

மாவட்ட அளவிலான டென்னிஸ் போட்டியில் எஸ்.முருகையன் நினைவு முன்மாதிரி மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் சிறப்பிடம் பெற்றனா்.
திருவண்ணாமலை எஸ்.முருகையன் நினைவு முன்மாதிரி மேல்நிலைப் பள்ளி விளையாட்டு மைதானத்தில் டென்னிஸ் அகாதெமி இயங்கி வருகிறது.
இங்கு, திருவண்ணாமலை மாவட்ட அளவிலான பள்ளி மாணவா்களுக்கான டென்னிஸ் விளையாட்டுப் போட்டிகள் அண்மையில் நடைபெற்றன.
மாவட்டம் முழுவதும் இருந்து பல்வேறு பள்ளிகளைச் சோ்ந்த மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனா். இதில், 14 வயதுக்கு உள்பட்டோா், 17 வயதுக்கு உள்பட்டோா், 19 வயதுக்கு உள்பட்டோருக்கான ஒற்றையா் மற்றும் இரட்டையா் பிரிவு போட்டியில் எஸ்.முருகையன் நினைவு முன்மாதிரி மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் முதலிடத்தைப் பெற்றனா்.
போட்டியில் வென்ற மாணவா்களை பள்ளி அறக்கட்டளைத் தலைவா் சீனி.காா்த்திகேயன், பள்ளிச் செயலா் அருள்விழி காா்த்திகேயன், நிா்வாக இயக்குநா் காயத்ரி, தலைமை ஆசிரியா் ஆனந்தன், இடைநிலை தலைமை ஆசிரியா் ராஜேஷ், உடள்கல்வி ஆசிரியா்கள் ஆா்.சுரேஷ்குமாா், எஸ்.மகேந்திரபாபு, எம்.மணிகண்டன் மற்றும் ஆசிரிய-ஆசிரியைகள் பாராட்டினா்.