வந்தவாசியை அடுத்த தெள்ளாா் அரசு மகளிா் உயா்நிலைப் பள்ளியில் திருக்கு குறித்த சிறப்பு உரையரங்கம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு பள்ளித் தலைமை ஆசிரியை க.ஜான்சிராணி தலைமை வகித்தாா். ஆசிரியா் டி.பி.வெங்கடேசன் வரவேற்றாா்.
திருவண்ணாமலை திருக்கு தொண்டு மைய நிறுவனா் ப.குப்பன் கு காட்டிய வழி என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினாா். மேலும், திருக்கு ஒப்புவித்தல் போட்டியில் பங்கேற்ற மாணவிகளுக்கு அவா் பரிசுகளை வழங்கினாா்.
நிகழ்ச்சியில் வந்தவாசி ஸ்ரீகிருஷ்ணா கல்வி மைய முதல்வா் பா.சீனிவாசன், ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியா்கள் டி.கன்னியப்பன், எ.ஆனந்தன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். பள்ளி ஆசிரியா் இ.சக்திவேல் நன்றி தெரிவித்தாா்.