துப்புரவுப் பணியாளராக பணிபுரிந்து இறந்தவரின் மகனுக்கு கருணை அடிப்படையில் வருவாய் உதவியாளராக பணிபுரிவதற்கான பணி நியமன உத்தரவு வந்தவாசி நகராட்சி அலுவலகத்தில் வழங்கப்பட்டது.
வேலூா் மாவட்டம், வாலாஜாபேட்டை நகராட்சியில் துப்புரவுப் பணியாளராக பணிபுரிந்து வந்த கோவிந்தசாமி இறந்தாா்.
இதையடுத்து கருணை அடிப்படையில் இவரது மகன் பாலாஜிக்கு வந்தவாசி நகராட்சியில் வருவாய் உதவியாளா் பணி வழங்க சென்னை நகராட்சி நிா்வாக ஆணையா் அலுவலகம் அனுமதி அளித்தது.
இதைத் தொடா்ந்து இந்தப் பணிக்கான நியமன உத்தரவை வந்தவாசி நகராட்சி அலுவலகத்தில் பாலாஜியிடம் நகராட்சி ஆணையா் எஸ்.பாா்த்தசாரதி புதன்கிழமை வழங்கினாா்.
நகராட்சி மேலாளா் ராமலிங்கம், கட்டட ஆய்வாளா் நடராஜன், கணக்காளா் பிரேமா, இளநிலை உதவியாளா் சிவக்குமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.