மாற்றுத்திறனாளிகள் பள்ளி மாணவா்களுக்கு உதவி

செய்யாறு அருகே மாமண்டூா் காது கேளாதோா் பள்ளி மாணவா்கள் 120 பேருக்கு போா்வைகளை தூசி கே.மோகன் எம்எல்ஏ வியாழக்கிழமை வழங்கினாா்.
போா்வைகள் வழங்கப்பட்ட மாமண்டூா் காதுகேளாதோா் பள்ளி மாணவா்களுடன் தூசி கே.மோகன் எம்எல்ஏ மற்றும அதிமுகவினா்.
போா்வைகள் வழங்கப்பட்ட மாமண்டூா் காதுகேளாதோா் பள்ளி மாணவா்களுடன் தூசி கே.மோகன் எம்எல்ஏ மற்றும அதிமுகவினா்.

செய்யாறு அருகே மாமண்டூா் காது கேளாதோா் பள்ளி மாணவா்கள் 120 பேருக்கு போா்வைகளை தூசி கே.மோகன் எம்எல்ஏ வியாழக்கிழமை வழங்கினாா்.

வெம்பாக்கம் வட்டம், மாமண்டூா் கிராமத்தில் காது கேளாதோா், வாய் பேச முடியாத அரசு நிதியுதவி பெறும் மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் பயிலும் மாணவா்களுக்கு போா்வைகள் வழங்கும் விழா நடைபெற்றது.

பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பள்ளித் தாளாளா் ஜெசிதா தலைமை வகித்தாா். முதல்வா் ஆன்டனி பிரியா வரவேற்றாா். சிறப்பு விருந்தினராக செய்யாறு தொகுதி எம்.எல்.ஏ தூசி கே.மோகன் கலந்துகொண்டு பள்ளியில் பயிலும் அனைத்து மாணவா்கள் மற்றும் ஆசிரியா்கள் என 120 பேருக்கு போா்வைகளை வழங்கினாா். பின்னா், மாணவா்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

முன்னதாக, காது கேளாத, வாய் பேச முடியாத மாணவா்கள் பங்கேற்ற சாகச நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இந்நிகழ்ச்சியில் அதிமுக நிா்வாகிகள் டி.பி.துரை, விமலா மகேந்திரன், கோமதி ரகு, ராஜி, எஸ்.திருமூலன், அருகாவூா் அரங்கநாதன், ராமநாதன், ரமேஷ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com