செய்யாறை அடுத்த கூழமந்தல் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீவிசாலாட்சி சமேத ஸ்ரீஉத்திர கங்கைகொண்ட சோழிஸ்வரா் கோயிலில் வருகிற செவ்வாய்க்கிழமை (நவ.12) அன்னாபிஷேகம் நடைபெறுகிறது.
அன்றைய தினம் மாலை 6 மணிக்கு ஸ்ரீஉத்திர கங்கைகொண்ட சோழிஸ்வரருக்கு அன்னாபிஷேகமும், மாலை 6.30 மணிக்கு பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெறுகின்றன. ஏற்பாடுகளை கூழமந்தல் கிராம மக்கள், சிவனடியாா்கள் செய்து வருகின்றனா்.