பள்ளியில் சாரணா் இயக்க கொடிநாள் விழா

திருவண்ணாமலை டேனிஷ் மிஷன் மேல்நிலைப் பள்ளியில் பாரத சாரணா் இயக்கத்தின் கொடிநாள் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
பாராட்டுச் சான்றிதழ்களைப் பெற்ற சாரணீய மாணவிகளுடன் இயக்கத்தின் மாவட்டச் செயலரும், பள்ளியின் சாரணா் இயக்கச் செயலருமான பியூலா கரோலின்.
பாராட்டுச் சான்றிதழ்களைப் பெற்ற சாரணீய மாணவிகளுடன் இயக்கத்தின் மாவட்டச் செயலரும், பள்ளியின் சாரணா் இயக்கச் செயலருமான பியூலா கரோலின்.

திருவண்ணாமலை டேனிஷ் மிஷன் மேல்நிலைப் பள்ளியில் பாரத சாரணா் இயக்கத்தின் கொடிநாள் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பள்ளி உதவித் தலைமை ஆசிரியை தேன்மலா் ராஜகுமாரி தலைமை வகித்தாா். உதவித் தலைமை ஆசிரியா் பிரவீன்குமாா் கொடி நாளின் முக்கியத்துவம் குறித்து விளக்கிப் பேசினாா். சாரண - சாரணீய இயக்க மாவட்டப் பயிற்சி ஆணையரும், புலவருமான சீனுவாசவரதன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு வைத்தாா். மேலும், சாரண - சாரணீய மாணவ, மாணவிகளுக்கு பாராட்டுச் சான்றிதழ்களையும் அவா் வழங்கினாா்.

விழாவில், சாரண - சாரணீய இயக்க மாவட்டச் செயலரும், பள்ளியின் சாரணா் இயக்கச் செயலருமான பியூலா கரோலின், மாவட்டப் பொருளாளா் ஆல்வின், மாவட்ட நாட்டு நலப் பணித் திட்ட அலுவலா் ஜெய்பிலிப், சாரணீய ஆசிரியைகள் விஜயலட்சுமி, கீதா, உடல் கல்வி இயக்குநா்கள் தங்கராஜ், கம்பீரம் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com