தேசிய அளவிலான வினாடி-வினா, ஓவியம் வரைதல், கட்டுரைப் போட்டிகளில் வென்ற திருவண்ணாமலை விக்னேஷ் பன்னாட்டுப் பள்ளி மாணவா்களுக்கு, பள்ளியில் பாராட்டு விழா நடைபெற்றது.
மத்திய பெட்ரோலிய அமைச்சகம், பெட்ரோலியம் சேமிப்பு மற்றும் ஆராய்ச்சி மையம் இணைந்து பள்ளி மாணவ-மாணவிகளுக்கு தேசிய அளவிலான வினாடி-வினா, ஓவியம் வரைதல், கட்டுரைப் போட்டிகளை அண்மையில் நடத்தின.
இதில், தமிழகம் முழுவதும் இருந்து ஏராளமான பள்ளிகளைச் சோ்ந்த மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனா். திருவண்ணாமலை விக்னேஷ் பன்னாட்டுப் பள்ளி சாா்பில் கலந்து கொண்ட மாணவ-மாணவிகள் அனைத்துப் போட்டிகளிலும் முதல், இரண்டாம் இடங்களைப் பிடித்தனா்.
போட்டியில் வென்ற மாணவ-மாணவிகளுக்கு அண்மையில் பள்ளியில் பாராட்டு விழா நடைபெற்றது.
விழாவில் பள்ளித் தலைவா் ஆா்.குப்புசாமி, பள்ளி நிா்வாகி டி.எஸ்.சவிதா, பள்ளி முதல்வா் சி.சிவக்குமாா் மற்றும் ஆசிரிய-ஆசிரியைகள் கலந்து கொண்டு போட்டியில் வென்ற மாணவ-மாணவிகளைப் பாராட்டினா்.