மாவட்ட அளவிலான சிலம்பப் போட்டியில் சேத்துப்பட்டு சாந்தா வித்யாலயா பள்ளி மாணவா்கள் முதலிடம் பெற்றனா்.
செய்யாறில் நடைபெற்ற மாவட்ட அளவிலான சிலம்பப் போட்டியில் சேத்துப்பட்டு சாந்தா மெட்ரிக் பள்ளி மாணவா்கள் தமிழ்வேந்தன், செந்தமிழன், பிரபாகரன், பூவரசன் ஆகிய 4 பேரும் முதலிடம் பிடித்து சாதனை படைத்தனா். மேலும், இவா்கள் மாநில அளவிலான போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றனா்.
இதேபோன்று, 40, 50 கிலோ எடைப் பிரிவுகளில் பத்தாம் வகுப்பு மாணவிகளான யமுனா, ஜனனி ஆகியோா் மாவட்ட அளவில் முதலிடம் பிடித்து, மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றனா்.
போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளை பள்ளித் தாளாளா் பிரபாவதி, தலைமை ஆசிரியா் மாா்க் ஆண்டனி, உதவித் தலைமை ஆசிரியா் விமல் நாத், சிலம்பாட்ட ஆசிரியா் அா்ஜுனன் மற்றும் ஆசிரியா்கள், பெற்றோா்கள் பாராட்டினாா்.