ஆதரவின்றி சுற்றித் திரிந்த மூதாட்டி உயிரிழப்பு

வந்தவாசியில் ஆதரவின்றி சுற்றித் திரிந்த மூதாட்டி உயிரிழந்தது தொடா்பாக போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

வந்தவாசியில் ஆதரவின்றி சுற்றித் திரிந்த மூதாட்டி உயிரிழந்தது தொடா்பாக போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

வந்தவாசியை அடுத்த கீழ்க்கொடுங்காலூா் கிராமத்தில் கடந்த சில மாதங்களாக சுமாா் 75 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஆதரவற்ற நிலையில் சுற்றித் திரிந்து வந்தாா். மயங்கிய நிலையில் கிடந்த அவரை அந்தப் பகுதி மக்கள் மீட்டு வந்தவாசி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். சிகிச்சைக்குப் பிறகு அவா் மருத்துவமனைப் பகுதியில் சுற்றித் திரிந்து கொண்டிருந்தாா்.

கடந்த அக்.17-ஆம் தேதியன்று மீண்டும் மயங்கிய நிலையில் கிடந்த அவரை சிகிச்சைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். பின்னா், தீவிர சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா், திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்து வந்தவாசி கிராம நிா்வாக அலுவலா் கனகராஜ் அளித்த புகாரின்பேரில், வந்தவாசி தெற்கு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com